தமிழர் பண்பாட்டின் தாய் தெய்வ மரபில் ஆதியும் அந்தமுமாக நிற்பவள் கொற்றவை. அவ்வை எனுஞ்சொல் மூத்தவள் எனும் பொருள் தரும். அதனை ஒட்டியே இவள் பழையோள் என்று விளிக்கப் பெறுகிறாள். வேட்டை சமூகமாக இருந்தப்போது அவர்களின் வேட்டை தெய்வமாக கொற்றவை இருந்திருக்கிறாள். தமிழரின் பாலை நிலத்து தெய்வமும் போர் மற்றும் போர்க்குடிகளின் தெய்வம் கொற்றவையே. கொற்றவையைப் பற்றி விரிவாக எடுத்து இயம்பும் நூல் சிலப்பதிகாரமே ஆகும். சிலம்பின் வேட்டுவ வரியில் கொற்றவை வருணனை பேசப்படுகிறது, கலைமான் மீதும் எருமைத்தலை மீதும் நிற்கும் கொற்றவை என்றும், வீரர்கள் தலைகளை அறிந்து வைக்கும் பலி பற்றியும், கொற்றவை கோயிலில் நடக்கும் மரக்கால் கூத்தைப்பற்றியும் விரிவாய் வருகிறது இந்தப்பகுதியில். #1 மனிதர்மேல் ஆவேசிக்கும் தெய்வம்! தமிழ் நிலப்பரப்பின் ஒரு சிறப்பு இங்கு தெய்வங்கள் மனிதர் உள்ளே புகுந்து பேசும் எனும் நம்பிக்கை, வெறியாடும் வேலன் முதல் பின்னாளில் வைணவ நூல்கள் கூறும் பெருமாள் அர்ச்சகமுகமாக ஆவேசித்து பேசுதல் வரை இன்றைக்கும் பல தெய்வங்கள் மனிதருள் புகுந்து பேசும் வழக்கம் உண்டு. கொற்றவை அந்த வகையில் சாலினி எனும் பெண்மேல் ஆவேச...
#இரும்புக்கால புதைவிடப்பகுதி இடம்: #குன்னத்தூர் மாவட்டம் :திருநெல்வேலி வட்டம் : திருநெல்வேலி #குன்னத்தூர் கிராமானது நெல்லையப்பர் கோவிலில் இருந்து பேட்டை வழியாக திருவேங்கடநாத கோவில் செல்லும் வழியில் 8 கி.மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) குன்னத்தூர் கிராமத்தின் இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள பரம்பில் ஆதிச்சநல்லூரை ஒத்த இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் மற்றும் வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரைப் போன்று இவ்விடம் மத்தியத்தொல்லியல் துறையால் பாதுக்காக்கப்பட்டு வரும் பகுதியாகும். தகவல் மற்றும் படம்: #மோ_பிரசன்னா திருநெல்வேலி தொல்லியல் கழகம்.
இத்திருக்கோயில் ஊருக்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 28-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் "முள்ளிநாட்டு பிரம்மதேயம் நிகரிலிச்சோழ சதுர்வேதி மங்கலத்து சோழேந்திரசிங்க ஈஸ்வரத்து........., என்றும் இறைவன் "கைலாயமுடைய மகாதேவர்" என்றும் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு களில் இவ்வூர் "சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்றும் இறைவன் "கைலாயமுடையார்" என்றும் "கைலாசமுடைய நாயனார்" என்றும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டு செய்திகள்: • சடாவர்மன் சுந்தரபாண்டிய தேவன் - கைலாசமுடையாருக்கு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கல சபையார் நிலம் விற்றது. • மாறவர்மன் என்ற உடையார் பராக்கிரம சோழ பாண்டிய தேவர் இராசராச பாண்டிய நாட்டில் உத்தம சோழ வல்ல நாட்டின் பிரிவாகிய முல்லைநாடு பிரமதேயம் நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள கைலாசமுடையாருக்கு விளக்குக்குப்பணம். • சட...
Comments
Post a Comment